என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘விசா’ பிரச்சினை குறித்து டிரம்புடன் மோடி பேசவேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை
Byமாலை மலர்23 Feb 2020 11:24 PM GMT (Updated: 23 Feb 2020 11:24 PM GMT)
எச்-1பி விசா பிரச்சினை குறித்து டிரம்புடன் பிரதமர் மோடி பேசவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி:
2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். டெல்லியில் நாளை அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசுகிறார்கள்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் பணியாற்ற செல்வோருக்காக வழங்கப்படும் 85 ஆயிரம் எச்-1பி விசாக்களில் 70 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகிறார்கள். அமெரிக்க அரசு குடியுரிமை தொடர்பான கொள்கைகளை கடுமையாக்கி இருப்பதால், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவோர் எச்-1பி விசா பெறுவது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த விசா நிராகரிப்பு, 2019-ம் ஆண்டில் 24 சதவீதமாக அதிகரித்து விட்டது.
எனவே பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்கும் போது எச்-1பி விசா பிரச்சினை குறித்து பேசவேண்டும். எச்-1பி விசா நடைமுறையை எளிமையாக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா விதித்துள்ள தடையால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டு இருப்பதால், இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்யுமாறு டிரம்பை மோடி கேட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆனந்த் சர்மா கூறுகையில், மோடி-டிரம்ப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு சாதகமாக பெரிய அளவில் எதுவும் நடந்து விடுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பை நீடிப்பது போன்ற வழக்கமான அம்சங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். டெல்லியில் நாளை அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசுகிறார்கள்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் பணியாற்ற செல்வோருக்காக வழங்கப்படும் 85 ஆயிரம் எச்-1பி விசாக்களில் 70 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகிறார்கள். அமெரிக்க அரசு குடியுரிமை தொடர்பான கொள்கைகளை கடுமையாக்கி இருப்பதால், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவோர் எச்-1பி விசா பெறுவது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த விசா நிராகரிப்பு, 2019-ம் ஆண்டில் 24 சதவீதமாக அதிகரித்து விட்டது.
அமெரிக்கா விதித்துள்ள தடையால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டு இருப்பதால், இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்யுமாறு டிரம்பை மோடி கேட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆனந்த் சர்மா கூறுகையில், மோடி-டிரம்ப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு சாதகமாக பெரிய அளவில் எதுவும் நடந்து விடுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பை நீடிப்பது போன்ற வழக்கமான அம்சங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X