என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆமதாபாத்தில் டிரம்ப், மோடி செல்கிற கிரிக்கெட் மைதானத்தில் தற்காலிக ‘கேட்’ விழுந்தது
Byமாலை மலர்23 Feb 2020 10:31 PM GMT (Updated: 23 Feb 2020 10:31 PM GMT)
ஆமதாபாத்தில் டிரம்ப், மோடி செல்கிற கிரிக்கெட் மைதானத்தில் பிளெக்ஸ் பேனர்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கேட் பலத்த காற்று காரணமாக கீழே விழுந்து சேதம் அடைந்தது.
ஆமதாபாத்:
ஆமதாபாத்தில் மோட்டேரா பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் ‘நமஸ்தே டிரம்ப்’ என்னும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் பேசுகிற இந்த நிகழ்ச்சியில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், மிகவும் முக்கியமான பிரபலங்களுக்காக (வி.வி.ஐ.பி.) கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே தற்காலிகமாக ஒரு ‘கேட்’ அமைக்கப்பட்டிருந்தது.
உருக்கு கம்பிகளையும், பிளெக்ஸ் பேனர்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த இந்த தற்காலிக ‘கேட்’, நேற்று காலையில் வீசிய பலத்த காற்று காரணமாக விழுந்து சேதம் அடைந்தது. சிறிது நேரத்தில் பிரதான நுழைவாயிலில் இன்னொரு தற்காலிக ‘கேட்’டும் விழுந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவங்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விழுந்த ‘கேட்’டுகள் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆமதாபாத்தில் மோட்டேரா பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் ‘நமஸ்தே டிரம்ப்’ என்னும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் பேசுகிற இந்த நிகழ்ச்சியில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், மிகவும் முக்கியமான பிரபலங்களுக்காக (வி.வி.ஐ.பி.) கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே தற்காலிகமாக ஒரு ‘கேட்’ அமைக்கப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X