என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் தவறாக பயன்படுத்தப்படுகிறது- மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
புதுடெல்லி:
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சுகள், எழுத்துக்கள் அடங்கிய புத்தம் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
இந்தியாவை எழுச்சி மிகு ஜனநாயகமாகவும், வல்லரசு சக்தியாகவும் உலக நாடுகள் அங்கீகரித்திருக்கிறது. என்றால் அதற்கான பெருமைகள் அனைத்தும் நமது முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவையை சாரும்.
இந்த புத்தகத்தில் நேருவின் உன்னதமான பேச்சுகள், அவரது உரைகள் கட்டுரைகள் கடிதங்கள் மிகவும் வெளியிப்படையான சில நேர்காணல்களில் இருந்து குறிப்புகள் உள்ளன.
மிகக் கடினமான நாட்களில் நாட்டை அவர் வழிநடத்திச்சென்றார். அந்த காலக்கட்டத்தில் மிகச்சில நாடுகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழியை அவர் தேர்வு செய்தார். தேர்வு செய்ததுடன் மட்டுமின்றி அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டினார்.
நேரு இல்லாவிட்டால் இன்று உள்ள நிலையை இந்தியா எட்டியிருக்க முடியாது. ஆனால் வரலாற்றை படிக்க பொறுமை இல்லாதவர்களும், பாரபட்சமான கருத்தைக் கொண்டிருப்பவர்களும் இன்று நேருவை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் தவறான கருத்தியவை புறம்தள்ளும் வலிமை வரலாற்றுக்கு உண்டு என நம்புகிறேன்.
இந்தியாவில் பல மில்லியன் மக்களை தவிர்த்து விட்டு, தீவிரவாத சிந்தனையை வளர்க்க தேசியவாதமும், பாரத் மாதா கி ஜெய் கோஷமும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்