search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசி தரூர், ராகுல் காந்தி
    X
    சசி தரூர், ராகுல் காந்தி

    ராகுல் காந்தி திரும்பாவிட்டால்.... சசி தரூர் சொல்ல வருவது என்ன?

    காங்கிரஸ் கட்சி துடிப்பான, முழுநேர தலைவரை கண்டுபிடிப்பது அவசியம் என மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.

    தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தற்காலிக தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். ஆனால் தலைவர் பதவியில் விறுவிறுப்பாக செயல்பட அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக கோரிக்கை எழுந்துள்ளது. சில மாநில தலைவர்கள் ராகுலை உடனே தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் ராகுல் மீண்டும் தலைவர் ஆகக்கூடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராகுல் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்தித்தால் தோல்விதான் ஏற்படும் என்றும் கூறி உள்ளனர்.

    இந்நிலையில் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ‘‘ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்காவிடில், கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல துடிப்பான மற்றும் முழுநேர தலைவர் கண்டுபிடிப்பது அவசியம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×