search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்

    ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள மல்ஹார் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்தது.

    இதனால் நிலைதடுமாறிய அந்த கார் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தள்ளனர். 

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×