என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் - பிரதமர் மோடி
Byமாலை மலர்22 Feb 2020 3:11 PM GMT (Updated: 22 Feb 2020 3:11 PM GMT)
கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என பேசினார்.
புதுடெல்லி:
ஒடிசாவின் கட்டாக் நகரில் ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளை புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வழியே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
ஒடிசாவில் முதல்முறையாக கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்திய விளையாட்டு போட்டிகளுக்கான வரலாற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்பதுடன் நில்லாமல், அதன் வருங்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கேலோ இந்தியா பள்ளிகளுக்கான போட்டிகளில் இந்த வருடம் 80 சாதனைகள் முறியடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 56 சாதனைகளை சிறுமிகள் செய்துள்ளனர்.
இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் ஏழைக் குடும்பத்து மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வந்த வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X