search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளி வினய் சர்மா
    X
    குற்றவாளி வினய் சர்மா

    நிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்

    திகார் சிறையில் உள்ள நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி கோரிய மனுவை டெல்லி கோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகே‌‌ஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் ஜெயிலில் 3-வது எண் சிறையில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என்று அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால், அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது இருமுறை தள்ளி வைக்கப்பட்டது.
     
    இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் மாதம் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட உத்தரவிட்டு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு கடந்த 17-ம் தேதி புதிய மரண வாரண்டை பிறப்பித்தது. இதனால் அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க சிறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா மரண பயத்தில் தவித்து வருகிறார். அவர் தனது அறையின் சுவரில் முட்டிக் கொண்டு காயம் அடைந்த தகவலும் வெளியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    வினய் சர்மா சுவரில் தலையை ஓங்கி முட்டிக் கொண்டதை பார்த்த சிறை அதிகாரி அவரை தடுத்து நிறுத்தினார். உடனே சிறையில் உள்ள டாக்டர்களை அழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, வினய் சர்மாவின் வக்கீல் ஏ.பி.சிங் கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் மனுதாக்கல் செய்தார். அதில், வினய் சர்மா மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது. அவருக்கு மனநல சிகிச்சை மற்றும் தலை, கையில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி கோரிய மனுவை டெல்லி பாட்டியாலா கோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    Next Story
    ×