என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி - சோனியா காந்தியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
Byமாலை மலர்21 Feb 2020 3:12 PM GMT (Updated: 21 Feb 2020 3:12 PM GMT)
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்ததால் கூட்டணி முறிந்தது.
இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்த சிவசேனா புதிய கூட்டணியை உருவாக்கி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.
இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே முதல் முறையாக இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவும் உடனிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் இன்று இரவு சந்தித்தனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியையும் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோ சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் உடனிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X