என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பஞ்சாப்பில் 2 ஹாக்கி வீரர்கள் சுட்டுக்கொலை
பாட்டியாலா:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் அம்ரிங்சிங். தேசிய அளவில் விளையாடி வருகிறார். இவரது நண்பர் சிம்ரஜித்சிங். இவரும் ஆக்கி வீரர் ஆவார்.
இருவரும் பஞ்சாப் மாநில எரிசக்தித்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
அம்ரிங் சிங்கும், சிம்ரஜித் சிங்கும் பாட்டியாலா பிரதாப் நகர் பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர். அப்போது அவர்களுக்கும், மனோஜ்குமார் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தந்தை-மகன் இருவரையும் ஹாக்கி வீரர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ்குமார் வீட்டுக்கு சென்று துப்பாக்கியை எடுத்து வந்தார்.
அவர் ஹாக்கி வீரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் இருவரும் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்கள்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாக்கி வீரர்களை சுட்டுக் கொன்ற தந்தை- மகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் பாட்டியாலா பகுதியில் உள்ள உணவு விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்