search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான கார்
    X
    விபத்துக்குள்ளான கார்

    ஜம்மு - லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

    ஜம்முவில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்துவா நோக்கி ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர்.

    சம்பா மாவட்டத்தின் ஹக்வால் பகுதியை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.

    இந்த கோரவிபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

    Next Story
    ×