search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேச்சுவார்த்தை நடத்திய மத்தியஸ்தர்கள்
    X
    பேச்சுவார்த்தை நடத்திய மத்தியஸ்தர்கள்

    ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுடன் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையை மறித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவருவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல் மாற்று இடத்துக்கு போராட்டக்காரா்கள் செல்லலாம் என்று அறிவுறுத்தினர். இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டேவை நியமித்தனர். அவர், வழக்குரைஞா் சாதனா ராமச்சந்திரன், முன்னாள் தலைமை தகவல் ஆணையா் வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோரின் உதவியை பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள்

    இந்நிலையில், மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஷாகீன் பாக் சென்று, போராட்டம் நடத்தும் பெண்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டனர். 

    ‘போராட்டம் நடத்தும் உங்கள் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் பிற மக்களுக்கும் உரிமைகள் உள்ளன. அந்த உரிமையும் பராமரிக்கப்பட வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறோம். நாங்கள் அனைவருக்கும் செவிசாய்ப்போம்,’ என மத்தியஸ்தர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×