search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயாவின் தாயார்
    X
    நிர்பயாவின் தாயார்

    இந்த முறையாவது குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் - நிர்பயாவின் தாயார்

    குற்றவாளிகள் அனைவரும் இந்த முறையாவது தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் என்று நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

    கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுவந்தது.

    இதற்கிடையில், குற்றவாளிகள்க்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்ப்பட்டன.

    இந்த மனுக்குக்கள் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்பயாவின் தாயார், ''குற்றவாளிகளை தூக்கிலிட நீதிமன்றம் விதித்த தீர்ப்பு இந்த முறையாவது இறுதியாக நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்’’ என்றார். 
    Next Story
    ×