என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளா உள்ளிட்ட 3 மாநில பாஜக தலைவர்கள் நியமனம்
Byமாலை மலர்15 Feb 2020 11:30 AM GMT (Updated: 15 Feb 2020 11:30 AM GMT)
மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பா.ஜ.க. தலைவர்களை அக்கட்சியின் தலைமை இன்று நியமித்துள்ளது.
புதுடெல்லி:
தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜ.க. மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே, பா.ஜ.க. தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கான பா.ஜ.க. தலைவர்களை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இன்று நியமித்துள்ளார்.
அதன்படி, கேரள மாநில பா.ஜ.க. தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் மாநில பா.ஜ.க. தலைவராக தல் பகதூர் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களாக தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X