என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா பா.ஜனதா தலைவராக சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் நியமனம்
Byமாலை மலர்14 Feb 2020 1:46 AM GMT (Updated: 14 Feb 2020 1:46 AM GMT)
மகாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவராக சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். மும்பை தலைவர் பதவியில் மங்கள் பிரபாத் லோதா மீண்டும் அமர்த்தப்பட்டார்.
மும்பை :
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியபோதும், ஆட்சியமைக்க போதிய இடங்களை பெற முடியவில்லை. இந்தநிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து புதிய கூட்டணி அரசை அமைத்து பாரதீய ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதனால் பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக பாரதீய ஜனதா தலைவர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல் நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின.
நவிமும்பை நெருலில் மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் வருகிற 16-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் மகாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாரதீய ஜனதா மும்பை பிரிவு தலைவராக உள்ள மங்கள் பிரபாத் லோதாவும் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியபோதும், ஆட்சியமைக்க போதிய இடங்களை பெற முடியவில்லை. இந்தநிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து புதிய கூட்டணி அரசை அமைத்து பாரதீய ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதனால் பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக பாரதீய ஜனதா தலைவர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல் நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின.
நவிமும்பை நெருலில் மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் வருகிற 16-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் மகாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாரதீய ஜனதா மும்பை பிரிவு தலைவராக உள்ள மங்கள் பிரபாத் லோதாவும் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X