என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-வது நாளாக தாக்குதல்
Byமாலை மலர்9 Feb 2020 11:18 PM GMT (Updated: 9 Feb 2020 11:18 PM GMT)
பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 2-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மெந்தர் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள்.
ஜம்மு:
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் தேக்வார் பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டபடியும் தாக்குதல் நடத்தினார்கள். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜீவ் சிங்(வயது 36) என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 2-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மெந்தர் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நேற்று நண்பகல் 12.30 மணியளவில் தொடங்கிய துப்பாக்கி சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இந்த சண்டையில் இந்திய தரப்பில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் தேக்வார் பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டபடியும் தாக்குதல் நடத்தினார்கள். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜீவ் சிங்(வயது 36) என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 2-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மெந்தர் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நேற்று நண்பகல் 12.30 மணியளவில் தொடங்கிய துப்பாக்கி சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இந்த சண்டையில் இந்திய தரப்பில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X