search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்துமீறி பீரங்கி தாக்குதல்
    X
    அத்துமீறி பீரங்கி தாக்குதல்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் ஒருவர் பலி

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று மதியம் 3.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற அவர்களுக்கு, ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
    Next Story
    ×