என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அறிகுறி: 80 இந்திய மாணவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை - வெளியுறவுத்துறை மந்திரி
Byமாலை மலர்7 Feb 2020 6:02 PM GMT (Updated: 7 Feb 2020 6:02 PM GMT)
வுகானில் உள்ள 80 இந்திய மாணவர்கள் வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு நமது அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சீனாவில் இருந்து பத்திரமாக கொண்டு வர தயார் என்று அறிவித்த போதிலும், மாலத்தீவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே அதற்கு முன்வந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பதிலளித்த அவர், தற்போது இந்திய மாணவர்கள் 80 பேர் வுகானில் இருப்பதாக கூறினார். அவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும், எஞ்சிய 70 பேரும் அங்கேயே தொடர்ந்து தங்க விரும்புவதாகவும் கூறினார். அவர்களை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றுக்குப்பிறகு இந்தியாவுக்கு ஆயிரத்து 275 விமானங்களில் வந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 539 பேருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு நமது அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சீனாவில் இருந்து பத்திரமாக கொண்டு வர தயார் என்று அறிவித்த போதிலும், மாலத்தீவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே அதற்கு முன்வந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பதிலளித்த அவர், தற்போது இந்திய மாணவர்கள் 80 பேர் வுகானில் இருப்பதாக கூறினார். அவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும், எஞ்சிய 70 பேரும் அங்கேயே தொடர்ந்து தங்க விரும்புவதாகவும் கூறினார். அவர்களை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றுக்குப்பிறகு இந்தியாவுக்கு ஆயிரத்து 275 விமானங்களில் வந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 539 பேருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X