என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் மாற்றாந்தாய் மனப்பான்மை- பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் கருத்து
Byமாலை மலர்1 Feb 2020 10:11 AM GMT (Updated: 1 Feb 2020 10:11 AM GMT)
டெல்லியை மீண்டும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியிருப்பதாக, பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருப்பதாகவும், மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதுதவிர துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.
இந்த பட்ஜெட் குறித்து ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுவருகின்றனர். அவ்வகையில், இந்த பட்ஜெட்டில், டெல்லியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
‘டெல்லிக்கு பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டெல்லியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மீண்டும் நடத்தியிருக்கிறார்கள். பாஜகவின் முன்னுரிமைகளில் டெல்லியை குறிப்பிடாதபோது, மக்கள் ஏன் அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, பாஜக இப்படி டெல்லியை ஏமாற்றினால், தேர்தலுக்குப் பிறகு, அந்த கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா?" என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X