என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற உதவிய சீனாவுக்கு நன்றி - வெளியுறவுத்துறை மந்திரி
Byமாலை மலர்31 Jan 2020 3:50 PM GMT (Updated: 31 Jan 2020 3:50 PM GMT)
சீனாவில் இருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற உதவிய சீன அரசுக்கு நன்றி என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவிவருகிறது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, சீனாவின் வுகான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் சீனா புறப்பட்டு சென்றது.
முதல் விமானம் அதிகாலை 2 மணிக்குள் இந்தியா திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது விமானம் நாளை இந்தியாவில் இருந்து சீனா புறப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை தொடர்பு கொண்டார்.
அப்போது, வுகான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு கொடுத்த சீன அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸை எதிர்கொண்டு போராடி வரும் சீனாவிற்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X