search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயா தாயார்
    X
    நிர்பயா தாயார்

    குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்ற இறுதிவரை போராடுவோம் - நிர்பயா தாயார் ஆவேசம்

    குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து போராடுவோம் என நிர்பயா தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதற்குமுன், ஜனவரி 22-ம் தேதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இறுதிவரை போராடுவோம் என என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். அரசு அவர்களை தூக்கில் போடவேண்டும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×