என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயிரிழந்தும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் இளம்பெண்
Byமாலை மலர்31 Jan 2020 6:42 AM GMT (Updated: 31 Jan 2020 8:18 AM GMT)
பல்பொருள் அங்காடி ஒன்றில் மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண் சமூக வலைதளங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் டிரெண்ட் ஆகியிருக்கிறார்.
மலேசிய பல்பொருள் அங்காடி ஒன்றில் இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரை விட்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வைரல் சிசிடிவி வீடியோவில் நிலைதடுமாறி கீழே விழும் இளம் பெண் அசைவின்றி காணப்படுகிறார், பின் அங்காடி ஊழியர் போன்ற சீருடையில் உள்ள நபர் அவரை தூக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. வீடியோவில் இளபெண் உயிரிழக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தான் காரணம், இதனால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது போன்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை ஆய்வு செய்ததில், மலேசிய செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தி தொகுப்பு இதே வீடியோ ஸ்கிரீன்ஷாட் உடன் கிடைத்தது. அந்த செய்தியில், தற்சமயம் வைரலாகும் வீடியோவில் காட்டப்படும் இளம்பெண்ணின் தாயார், தனது மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதை தெளிவுப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜனவரி 26-ம் தேதி மலேசியாவின் கிலாங் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. பல்பொருள் அங்காடியில் உயிரிழந்த இளம்பெண் நூர் இசா இசாட்டி என்பது தெரியவந்துள்ளது. இவரது குடும்பத்தார் இவர் கொரோனா வைரஸ் மூலம் உயிரிழக்கவில்லை என்றும் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில் ஃபேஸ்புக் மற்றும் இதர சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் இருப்பவர் கொரோனா வைரஸ் மூலம் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X