search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளி அக்சய் குமார்
    X
    குற்றவாளி அக்சய் குமார்

    நிர்பயா வழக்கு- குற்றவாளி அக்சய் குமாரின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    நிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளிகளில் ஒருவர், தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    உச்ச நீதிமன்றம்

    அவ்வகையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங், தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா,  அருண் குமார் மிஷ்ரா, ஆர்.எப்.நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. எனவே, அக்சய் குமாருக்கு இனி, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. 

    குற்றவாளிகளில் பவன் குமார் குப்தா மட்டும் இதுவரை மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. 4 குற்றவாளிகளில் முகேஷ் மட்டுமே ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மற்றொரு குற்றவாளி வினய் சர்மா கருணை மனு அனுப்பி உள்ளார். மற்ற இருவரும் அந்த வாய்ப்பை இன்னும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×