search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    ஒடிசா - பேருந்து விபத்தில் 9 பேர் பரிதாப பலி

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம் காஷிப்பூரிலிருந்து பெர்ஹாம்பூருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை தப்தபாணி காட்  என்ற பாலம் அருகே சென்றபோது, 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து அந்த பேருந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 35 பேர் படுகாயம் அடைந்தனர். 

    தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×