என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்
Byமாலை மலர்29 Jan 2020 12:42 AM GMT (Updated: 29 Jan 2020 12:42 AM GMT)
கும்பமேளாவின் போது சிறப்பாக பணியாற்றிய மாநில ஊழியர் களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 2 மாதங்களாக கும்பமேளா கோலாகலமாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 24 கோடி பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில் 10 லட்சம் பேர் வெளிநாட்டவர் ஆவர். இருப்பினும் ஒரு அசம்பாவித செயல் கூட நிகழவில்லை.
எனவே இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கும்பமேளாவின் போது சிறப்பாக பணியாற்றிய மாநில ஊழியர் களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி, ஏறத்தாழ 1½ லட்ச மாநில அரசு ஊழியர்கள் இந்த போனஸ் தொகையை பெறுகிறார்கள். அவர்களில் 43 ஆயிரம் பேர் போலீசார் ஆவர். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும்.
இந்த விழாவின் போது ஒரே நேரத்தில் 10 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து புதிய சாதனை படைத்து உள்ளனர். கும்பமேளா விழாவிற்காக உ.பி. அரசு சுமார் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவிட்டு இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 2 மாதங்களாக கும்பமேளா கோலாகலமாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 24 கோடி பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில் 10 லட்சம் பேர் வெளிநாட்டவர் ஆவர். இருப்பினும் ஒரு அசம்பாவித செயல் கூட நிகழவில்லை.
எனவே இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கும்பமேளாவின் போது சிறப்பாக பணியாற்றிய மாநில ஊழியர் களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி, ஏறத்தாழ 1½ லட்ச மாநில அரசு ஊழியர்கள் இந்த போனஸ் தொகையை பெறுகிறார்கள். அவர்களில் 43 ஆயிரம் பேர் போலீசார் ஆவர். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும்.
இந்த விழாவின் போது ஒரே நேரத்தில் 10 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து புதிய சாதனை படைத்து உள்ளனர். கும்பமேளா விழாவிற்காக உ.பி. அரசு சுமார் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவிட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X