search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றில் விழுந்த பேருந்து மற்றும் பயணிகளை மீட்கும் பணி
    X
    கிணற்றில் விழுந்த பேருந்து மற்றும் பயணிகளை மீட்கும் பணி

    நேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்த வாகனங்கள்- 7 பேர் உயிரிழப்பு

    மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கிணற்றில் விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும், சாலையோரம் உள்ள கிணற்றில் விழுந்தன. இதனால் மேஷி பாடா பகுதியில் இன்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவினர். இவ்விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
    Next Story
    ×