என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் சாசனம் மீது பாஜகவினருக்கு நம்பிக்கை இல்லை: சித்தராமையா
Byமாலை மலர்27 Jan 2020 2:35 AM GMT (Updated: 27 Jan 2020 2:35 AM GMT)
பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி கிடையாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களுக்கு இது தக்க பாடமாக அமையும். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்க வேண்டும்.
கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயங்களில் கட்சி மேலிடம் சரியான முடிவு எடுக்கும். நமது தேசத்திற்காக ஏராளமானவர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. நமது அரசியல் சாசனம் மிக சிறப்பானது.
பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அம்பேத்கர் உருவாக்கிய இந்த அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பணியை செய்வோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாடு ஆபத்தில் உள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி கிடையாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களுக்கு இது தக்க பாடமாக அமையும். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்க வேண்டும்.
கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயங்களில் கட்சி மேலிடம் சரியான முடிவு எடுக்கும். நமது தேசத்திற்காக ஏராளமானவர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. நமது அரசியல் சாசனம் மிக சிறப்பானது.
பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அம்பேத்கர் உருவாக்கிய இந்த அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பணியை செய்வோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாடு ஆபத்தில் உள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X