என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்
Byமாலை மலர்26 Jan 2020 7:55 PM GMT (Updated: 26 Jan 2020 7:55 PM GMT)
பிரதமர் மோடிக்கு அரசியல் சட்டத்தின் பிரதியை காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்தது. நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்குமாறு கூறியுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, அரசியல் சட்டத்தின் ஒரு பிரதியை பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று அனுப்பி வைத்தது.
இந்த தகவல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், பிரதமரின் செயலகத்துக்கு அரசியல் சட்டத்தின் பிரதியை கொண்டு செல்லும் கூரியர் நிறுவனத்தின் ரசீதும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ‘டுவிட்டர்’ பதிவில் காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதாவது:-
பிரதமர் அவர்களே, அரசியல் சட்டம் விரைவில் உங்களுக்கு வந்து சேரும். நாட்டை பிளவுபடுத்தும் பணிக்கிடையே நேரம் கிடைக்கும்போது, தயவுசெய்து அதை படித்து பாருங்கள். நன்றி.
சாதி, இனம், பாலினம் வேறுபாடின்றி அனைவரும் சட்டத்தின் முன்பு சமம் என்று அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், பா.ஜனதா அதை புரிந்து கொள்ள மறுக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், இந்த சட்டப்பிரிவை முற்றிலுமாக மீறுகிறது.
எல்லாவகையான பாகுபாட்டில் இருந்தும் அனைவரும் பாதுகாக்கப்படுவதாக அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, பாகுபாடு அடிப்படையில் சட்டங்களை உருவாக்கும் எந்த முயற்சியும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், ராஜ்காட் பகுதியில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் அரசியல் சட்டத்தின் முன்னுரையை வாசிக்கும் வீடியோ படத்தையும் காங்கிரஸ் கட்சி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, அரசியல் சட்டத்தின் ஒரு பிரதியை பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று அனுப்பி வைத்தது.
இந்த தகவல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், பிரதமரின் செயலகத்துக்கு அரசியல் சட்டத்தின் பிரதியை கொண்டு செல்லும் கூரியர் நிறுவனத்தின் ரசீதும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ‘டுவிட்டர்’ பதிவில் காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதாவது:-
பிரதமர் அவர்களே, அரசியல் சட்டம் விரைவில் உங்களுக்கு வந்து சேரும். நாட்டை பிளவுபடுத்தும் பணிக்கிடையே நேரம் கிடைக்கும்போது, தயவுசெய்து அதை படித்து பாருங்கள். நன்றி.
சாதி, இனம், பாலினம் வேறுபாடின்றி அனைவரும் சட்டத்தின் முன்பு சமம் என்று அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், பா.ஜனதா அதை புரிந்து கொள்ள மறுக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், இந்த சட்டப்பிரிவை முற்றிலுமாக மீறுகிறது.
எல்லாவகையான பாகுபாட்டில் இருந்தும் அனைவரும் பாதுகாக்கப்படுவதாக அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, பாகுபாடு அடிப்படையில் சட்டங்களை உருவாக்கும் எந்த முயற்சியும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், ராஜ்காட் பகுதியில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் அரசியல் சட்டத்தின் முன்னுரையை வாசிக்கும் வீடியோ படத்தையும் காங்கிரஸ் கட்சி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X