search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன்
    X
    சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன்

    சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மஸ்ரீ விருது வழங்கி வருகிறது.

    இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்தினாளி சமூக சேவகரும் அமர்சேவா சங்கத்தை சேர்ந்தவருமான எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட 118 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    பத்மஸ்ரீ விருது 

    மேலும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜா. கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜா. 

    ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
    Next Story
    ×