என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் சேவை
Byமாலை மலர்25 Jan 2020 7:49 AM GMT (Updated: 25 Jan 2020 7:49 AM GMT)
காஷ்மீரில் மொபைல் இணைய சேவை 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் தொடங்கி உள்ளது. ஆனாலும் 2ஜி இணைய சேவை மிகவும் மெதுவாகவே செயல்படும்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
இதையடுத்து போராட்டம் மற்றும் பிரச்சினைகளை தடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செல்போன், இணையதள சேவை உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் தடைசெய்யப்பட்டன. காஷ்மீரில் ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பியதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட ஜம்முவின் ராம்பன், கிஷ்த்லார், தோடா மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
ஆனாலும் காஷ்மீரில் பல மாவட்டங்களில் மொபைல், இணையதள சேவைகள் முடக்கம் தொடர்ந்தது. காஷ்மீரிலும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சில அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டல்களில் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
அதேபோல் கடந்த வாரம் குப்வாரா, பாரமுல்லா ஆகிய 2 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் முழுவதும் இணையதள சேவை வழங்க வேண்டும் எனறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே ஜம்முவில் பாதுகாப்பு தொடர்பான மறுஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் முழுவதும் இணையதள சேவையை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி உள்துறை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீர் முழுவதும் 2ஜி மெபைல் இணைய சேவைகள் இன்று முதல் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இணைய சேவைகள் மீட்டமைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அதன்படி காஷ்மீரில் மொபைல் இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கி உள்ளது. ஆனாலும் 2ஜி இணைய சேவை மிகவும் மெதுவாகவே செயல்படும்.
அதேவேளையில் சமூக வலைதளங்களுக்கான தடை தொடரும் என்றும் இணையதள சேவைகளின் மூலம் 301 வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
இதையடுத்து போராட்டம் மற்றும் பிரச்சினைகளை தடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செல்போன், இணையதள சேவை உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் தடைசெய்யப்பட்டன. காஷ்மீரில் ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பியதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட ஜம்முவின் ராம்பன், கிஷ்த்லார், தோடா மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
ஆனாலும் காஷ்மீரில் பல மாவட்டங்களில் மொபைல், இணையதள சேவைகள் முடக்கம் தொடர்ந்தது. காஷ்மீரிலும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சில அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டல்களில் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
அதேபோல் கடந்த வாரம் குப்வாரா, பாரமுல்லா ஆகிய 2 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் முழுவதும் இணையதள சேவை வழங்க வேண்டும் எனறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே ஜம்முவில் பாதுகாப்பு தொடர்பான மறுஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் முழுவதும் இணையதள சேவையை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி உள்துறை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீர் முழுவதும் 2ஜி மெபைல் இணைய சேவைகள் இன்று முதல் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இணைய சேவைகள் மீட்டமைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அதன்படி காஷ்மீரில் மொபைல் இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கி உள்ளது. ஆனாலும் 2ஜி இணைய சேவை மிகவும் மெதுவாகவே செயல்படும்.
அதேவேளையில் சமூக வலைதளங்களுக்கான தடை தொடரும் என்றும் இணையதள சேவைகளின் மூலம் 301 வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X