என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான், வங்கதேச இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் -சிவசேனா
Byமாலை மலர்25 Jan 2020 4:37 AM GMT (Updated: 25 Jan 2020 4:37 AM GMT)
பாகிஸ்தான், வங்கதேச இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சிவசேனா கூறி உள்ளது.
மும்பை:
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அந்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என சிவசேனா கூறி உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையில் இது தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், ‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேச இஸ்லாமியர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. சிவசேனா எப்போதும் இந்துத்துவாவுக்காக போராடியது. குடியுரிமை திருத்த சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகளில் பாஜகவால் செய்ய முடியாத பணிகளை, இப்போதைய மகா கூட்டணி 50 நாட்களில் செய்துள்ளது.’ என சிவசேனா கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X