search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி நடத்தினால் கெஜ்ரிவால்தான் முதல் பரிசு பெறுவார் - அமித்ஷா தாக்கு

    டெல்லியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி நடத்தினால் அதில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முதல் பரிசு பெறுவார் என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை முனைப்பு காட்டி வருகின்றன.

    அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 

    இந்நிலையில், தலைநகர் டெல்லியின் மேற்கில் அமைந்துள்ள மட்டியாலா தொகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

    நாட்டில் தற்போது பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி ஒன்றை நடத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால் நிச்சயம் முதல் பரிசு பெறுவார்.
    கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஆனால் டெல்லி மக்களோ, பா.ஜ.க.வினரோ அதை மறக்கவில்லை.
    லோக்பால் சட்டம் கொண்டு வரச்சொல்லி போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே உதவியுடன் தான் நீங்கள் முதல் மந்திரியாக வந்தீர்கள்.

    மத்தியில் உள்ள மோடி அரசு லோக்பால் சட்டத்தை அமல்படுத்தி விட்டது. ஆனால் டெல்லியில் அந்த சட்டத்தை நீங்கள் ஏன் அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
    Next Story
    ×