என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரசால் கேரள நர்சுகளுக்கு பாதிப்பா? - வெளியுறவுத் துறையிடம் விளக்கம் கேட்கும் பினராயி விஜயன்
Byமாலை மலர்23 Jan 2020 11:50 AM GMT (Updated: 23 Jan 2020 11:50 AM GMT)
கேரள நர்சுகள் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனரா என்பதை சவுதி அரேபியா அரசிடம் கேட்டு விளக்கவேண்டும் என முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்:
சீனாவின் வுகான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் நோய் முதலில் பரவியது. அதைத்தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தங்களது நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கேரள நர்சுகள் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனரா என சவுதி அரேபியா அரசிடம் கேட்டு விளக்கவேண்டும் என முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், சவுதியில் கேரள நர்சுகள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அவர்களை தாக்கி உள்ளதா? என்பதை சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X