என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விண்வெளிக்கு மனித ரோபோ அனுப்பும் இஸ்ரோ
Byமாலை மலர்22 Jan 2020 10:53 AM GMT (Updated: 22 Jan 2020 10:53 AM GMT)
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான ரோபோவை முதலில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வரும் 2022ம் ஆண்டு 3 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு செல்ல உள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
‘வயோம் மித்ரா’ எனும் பெண் உருவம் உடைய ரோபோ இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது.
விண்வெளிக்கு அனுப்புவதற்கு மனித உருவ ரோபோ தயாராக உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சி துறையில் நமது திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி பாதுகாப்பாக திருப்பி கொண்டுவரவும் உதவுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X