search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

    பிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய வருகையின் போது பிரதமர் மோடியுடன் பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியா வர திட்டமிட்டுள்ளார். அவரது வருகை 2 நாட்கள் சுற்றுப்பயணம் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு சமீபத்தில் இந்தியா வந்து ஆலோசனை நடத்தியது. அதில் டிரம்ப் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அநேகமாக பிப்ரவரி மாத இறுதியில் குறிப்பாக 24, 25-ந்தேதிகளில் டிரம்ப் இந்தியா வர வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை விரைவில் இரு நாடுகளும் வெளியிட உள்ளன.

    பிரதமர் மோடி


    இந்தியா வருகையின் போது பிரதமர் மோடியுடன் பல்வேறு முக்கிய பேச்சு வார்த்தைகளை டிரம்ப் நடத்த உள்ளார். டிரம்ப்-மோடி சந்திப்பை டெல்லி அல்லது மேற்கு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது ஹீஸ்டன் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் டிரம்ப்புடன் சென்று கலந்துகொண்டார். அதேபோன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

    இதுதவிர டிரம்ப்புடன் மோடியும் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். குறிப்பாக இந்தியா- அமெரிக்கா இடையே ராணுவ துறையில் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக உள்ளன.
    Next Story
    ×