என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் இளம் பெண் போலீசில் சரண்
Byமாலை மலர்21 Jan 2020 3:18 PM GMT (Updated: 21 Jan 2020 3:18 PM GMT)
ஒடிசா மாநிலத்தில் தலைக்கு 2 லட்ச ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட 22 வயதே நிரம்பிய இளம் மாவோயிஸ்ட் பெண் இன்று போலீசில் சரணடைந்தார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டம் கமர்பள்ளி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆத்மி மத்கமி (22). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்.
இதையடுத்து, ஆத்மி மத்கமி கொலை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது தலைக்கு 2 லட்ச ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்டது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் மத்கமி இன்று மல்கங்கிரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தார்.
ஆயுதங்களை கைவிட்டு மனம் திருந்தி சரணடைந்ததால் அவருக்கு மாநில அரசு வழங்கும் மறுவாழ்விற்காக உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X