என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் - ப.சிதம்பரம் கருத்து
Byமாலை மலர்21 Jan 2020 8:29 AM GMT (Updated: 21 Jan 2020 8:29 AM GMT)
பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது.
தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறையும் என்று ஐ.எம்.எப் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறைந்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஐ.எம்.எப் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்தது கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.
அவர் ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து இருந்தார். தற்போது பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்று கணித்துள்ளார். இதனால் ஐ.எம்.எப் மற்றும் கீதா கோபிநாத் மீது மத்திய மந்திரிகள் நடத்தவுள்ள தாக்குதலுக்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது.
தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறையும் என்று ஐ.எம்.எப் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறைந்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஐ.எம்.எப் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்தது கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.
அவர் ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து இருந்தார். தற்போது பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்று கணித்துள்ளார். இதனால் ஐ.எம்.எப் மற்றும் கீதா கோபிநாத் மீது மத்திய மந்திரிகள் நடத்தவுள்ள தாக்குதலுக்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X