search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் வீரர்கள்
    X
    பாதுகாப்பு பணியில் வீரர்கள்

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அப்போது அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×