என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் வன சுற்றுலாவை மேம்படுத்த குழு: ஆதித்ய தாக்கரே தகவல்
Byமாலை மலர்20 Jan 2020 2:05 AM GMT (Updated: 20 Jan 2020 2:05 AM GMT)
தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வனம் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கூறினார்.
மும்பை :
மகாராஷ்டிராவில் சுற்றுலாவிற்காக வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் வருகிறார்கள். இந்தநிலையில், மாநிலத்தில் வன சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி ஆதித்ய தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் வன பாதுகாப்பை அதிகரிப்பதோடு அங்கு சுற்றுலாவையும் மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வனம் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக குழு அமைக்கப்பட உள்ளது.
இந்த குழுவில் சுற்றுலா மற்றும் வனத்துறையை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். தற்போதுள்ள சுற்றுலா மையங்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் அவற்றை வலுப்படுத்த முடியும். மேலும் சுற்றுலா மேம்பாடு சுற்றுச்சூழலுடன் உகந்ததாக இருக்க வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் காடுகளையும் சுற்றுலா தலங்களாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் சுற்றுலாவிற்காக வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் வருகிறார்கள். இந்தநிலையில், மாநிலத்தில் வன சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி ஆதித்ய தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் வன பாதுகாப்பை அதிகரிப்பதோடு அங்கு சுற்றுலாவையும் மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வனம் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக குழு அமைக்கப்பட உள்ளது.
இந்த குழுவில் சுற்றுலா மற்றும் வனத்துறையை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். தற்போதுள்ள சுற்றுலா மையங்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் அவற்றை வலுப்படுத்த முடியும். மேலும் சுற்றுலா மேம்பாடு சுற்றுச்சூழலுடன் உகந்ததாக இருக்க வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் காடுகளையும் சுற்றுலா தலங்களாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X