என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார் - எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்
Byமாலை மலர்19 Jan 2020 8:09 PM GMT (Updated: 19 Jan 2020 8:09 PM GMT)
சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார் என முன்னாள் மத்திய மந்திரியும், பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர் தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியும், பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர், ‘காந்தியின் இந்துத்துவம்: ஜின்னாவின் இஸ்லாமுக்கு எதிரான போராட்டம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதில், 1940-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தலைவர்களின் கொள்கை, ஆளுமை, தவறுகள் ஆகியவற்றை விவரித்துள்ளார்.
அதில், அக்பர் கூறியிருப்பதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை காந்தி விரும்பவில்லை. இரு நாடுகளிலும் சிறுபான்மையினராக இருப்பவர்களின் கதி பற்றித்தான் அவர் உடனடியாக கவலைப்பட்டார்.
பிரிவினை நடப்பது உறுதியாக தெரிந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள நவகாளிக்கு சென்று, மீண்டும் கலவரம் நடப்பதை தடுக்க விரும்பினார்.
1947-ம் ஆண்டு மே 31-ந் தேதி, ‘எல்லை காந்தி’ என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானை காந்தி அழைத்தார். எல்லை காந்தியிடம், “நான் பிரிவினையை விரும்பவில்லை. பிரிவினைக்கு பிறகு, வடமேற்கு எல்லைப்புறத்துக்கு சென்று பாகிஸ்தானில் வசிக்க போகிறேன். இதற்காக யாரிடமும் அனுமதி கேட்கப்போவதில்லை. அவர்களை மீறியதற்காக என்னை கொலை செய்தாலும், சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவுவேன். அவர்கள் என்னை என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்” என்று காந்தி கூறினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியும், பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர், ‘காந்தியின் இந்துத்துவம்: ஜின்னாவின் இஸ்லாமுக்கு எதிரான போராட்டம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதில், 1940-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தலைவர்களின் கொள்கை, ஆளுமை, தவறுகள் ஆகியவற்றை விவரித்துள்ளார்.
அதில், அக்பர் கூறியிருப்பதாவது:-
பிரிவினை நடப்பது உறுதியாக தெரிந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள நவகாளிக்கு சென்று, மீண்டும் கலவரம் நடப்பதை தடுக்க விரும்பினார்.
1947-ம் ஆண்டு மே 31-ந் தேதி, ‘எல்லை காந்தி’ என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானை காந்தி அழைத்தார். எல்லை காந்தியிடம், “நான் பிரிவினையை விரும்பவில்லை. பிரிவினைக்கு பிறகு, வடமேற்கு எல்லைப்புறத்துக்கு சென்று பாகிஸ்தானில் வசிக்க போகிறேன். இதற்காக யாரிடமும் அனுமதி கேட்கப்போவதில்லை. அவர்களை மீறியதற்காக என்னை கொலை செய்தாலும், சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவுவேன். அவர்கள் என்னை என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்” என்று காந்தி கூறினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X