search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி ஆசிரியை ரூபஸ்ரீ.
    X
    பள்ளி ஆசிரியை ரூபஸ்ரீ.

    தலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை

    கேரள மாநிலத்தில் தலைமுடியை அறுத்து பள்ளி ஆசிரியை கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா மஞ்சேஸ் வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் பாங்கியில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ரூபஸ்ரீ (வயது 44). அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ரூபஸ்ரீ தினமும் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். கடந்த 16-ந் தேதி பள்ளி முடிந்ததும் ரூபஸ்ரீ, தனது குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்றார். பின்னர் அங்கு நடந்த தனது உறவினர் இல்ல திருமணத்திலும் பங்கேற்றார்.

    அதன்பிறகு ஆசிரியை ரூபஸ்ரீ வீடு திரும்பவில்லை. பல இடங்களில் அவரை கணவரும், உறவினர்களும் தேடிப்பார்த்தனர். ஆனால் ரூபஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று மஞ்சேஸ்வரம் கடற்கரையில் ரூபஸ்ரீ பிணமாக கிடந்தார். அவரது தலை முடி அறுக்கப்பட்டு இருந்தது. உடலிலும் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது. ரூபஸ்ரீயை யாராவது கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

    அந்த வழியாகச் சென்ற மீனவர்கள் ரூபஸ்ரீ பிணமாக கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூபஸ்ரீயை கடத்தியவர்கள் அவரை கற்பழித்துக் கொலை செய்தார்களா? எதற்காக தலைமுடியை அறுத்துக் கொலை செய்தனர்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    ரூபஸ்ரீ மாயமான போது 2 செல்போன்கள் வைத்திருந்தார். அதில் ஒரு போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. மற்றொரு செல்போனில் தொடர்ந்து அழைப்பு சென்று கொண்டே இருக்கிறது. செல்போன் டவர் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் ரூபஸ்ரீயின் வீட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த செல்போன் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் சிக்கினால் ரூபஸ்ரீயை கொலை செய்தவர்கள் யார்? என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே ரூபஸ்ரீ சென்ற மோட்டார் சைக்கிள் கடற்கரை பகுதியிலேயே மீட்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×