என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பெற்றோர் பிறந்த இடம் தேவையில்லை - மத்திய அரசு
Byமாலை மலர்18 Jan 2020 9:41 AM GMT (Updated: 18 Jan 2020 9:41 AM GMT)
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பெற்றோர் பிறந்த இடம் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காளம், கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன.
இதேபோல தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் வீடு வீடாக சென்று 2020-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக 16 கேள்விகள் அடங்கிய ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தாயார், தந்தை பிறந்த இடம் அல்லது நாடு குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தகவல்களும் வெளியானது. இதனால் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநில அரசுகள் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்த மாட்டோம் என தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆலோசனை நடத்த மத்திய பதிவாளர் மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தை உள்துறை செயலாளர் அஜய் பல்லா நடத்தினார்.
கூட்டத்துக்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன்ரெட்டி தலைமை தாங்கினார். அதில் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை மேற்கு வங்காளம் புறக்கணிக்கும் என்றும் அதே சமயம் கூட்டத்தில் அதிகாரி ஒருவர் பங்கேற்பார் என்றும் முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்து இருந்தார். அதன்படி அதில் அம்மாநில தலைமை செயலாளர் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் தலைமை செயலாளர் டி.பி.குப்தா பேசும்போது, தேசியமக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற்றுள்ள கேள்விகளுக்கு பல மாநில அரசுகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. குறிப்பாக ஒருவரின் தாய், தந்தை பிறந்த இடம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் சிலருக்கே தாங்கள் எங்கு பிறந்தோம் என்று தெரிவதில்லை. அவ்வாறு இருக்க அவர்கள் பெற்றோர் பிறந்த இடம் குறித்து தெரிய வாய்ப்பில்லை. என்ன காரணத்துக்காக இக்கேள்வி கேட்கப்படுகிறது. எனவே சாத்தியமற்ற அந்த கேள்வியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் இக்கேள்விக்கு பொதுமக்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை. சுய விருப்பத்தின் பேரில் வேண்டுமானால் பதில் அளிக்கலாம். பதில் அளிக்கும்படி வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எந்த ஒரு ஆவணத்தையும் காட்ட வேண்டிய கட்டாயமில்லை.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு இணைக்கப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன்ரெட்டி உறுதி அளித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காளம், கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன.
இதேபோல தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் வீடு வீடாக சென்று 2020-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக 16 கேள்விகள் அடங்கிய ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தாயார், தந்தை பிறந்த இடம் அல்லது நாடு குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தகவல்களும் வெளியானது. இதனால் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநில அரசுகள் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்த மாட்டோம் என தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆலோசனை நடத்த மத்திய பதிவாளர் மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தை உள்துறை செயலாளர் அஜய் பல்லா நடத்தினார்.
கூட்டத்துக்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன்ரெட்டி தலைமை தாங்கினார். அதில் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை மேற்கு வங்காளம் புறக்கணிக்கும் என்றும் அதே சமயம் கூட்டத்தில் அதிகாரி ஒருவர் பங்கேற்பார் என்றும் முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்து இருந்தார். அதன்படி அதில் அம்மாநில தலைமை செயலாளர் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் தலைமை செயலாளர் டி.பி.குப்தா பேசும்போது, தேசியமக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற்றுள்ள கேள்விகளுக்கு பல மாநில அரசுகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. குறிப்பாக ஒருவரின் தாய், தந்தை பிறந்த இடம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் சிலருக்கே தாங்கள் எங்கு பிறந்தோம் என்று தெரிவதில்லை. அவ்வாறு இருக்க அவர்கள் பெற்றோர் பிறந்த இடம் குறித்து தெரிய வாய்ப்பில்லை. என்ன காரணத்துக்காக இக்கேள்வி கேட்கப்படுகிறது. எனவே சாத்தியமற்ற அந்த கேள்வியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் இக்கேள்விக்கு பொதுமக்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை. சுய விருப்பத்தின் பேரில் வேண்டுமானால் பதில் அளிக்கலாம். பதில் அளிக்கும்படி வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எந்த ஒரு ஆவணத்தையும் காட்ட வேண்டிய கட்டாயமில்லை.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு இணைக்கப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன்ரெட்டி உறுதி அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X