என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் தேவை - மோகன் பகவத்
Byமாலை மலர்18 Jan 2020 2:42 AM GMT (Updated: 18 Jan 2020 2:42 AM GMT)
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.
மொராதாபாத்:
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாட்டில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையை ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தில் சேர்த்து உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் அவசியம். 2 குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம். எனினும் இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பகவத் கூறும்போது, ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஒரு தன்னம்பிக்கையான சூழல் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தின் யதார்த்தத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை’ என்று குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X