என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களை கண்ணியமாக நடத்துங்கள்- அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி அறிவுரை
Byமாலை மலர்17 Jan 2020 9:27 PM GMT (Updated: 17 Jan 2020 9:27 PM GMT)
மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார்.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக், “மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான். இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர்கள்தான் ஊதியம் தருகிறார்கள். அவர்களே உண்மையான எஜமான். அவர்கள் உங்களை நாடி வரும்போது கண்ணியமாக நடத்துங்கள். அவர்களின் பிரச்சினைகளை நேர்மையாக அணுகுங்கள்” என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
“நம் அனைவருக்கும் குடும்பம்தான் முக்கியமானது. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பம் 4.5 கோடி மக்களை கொண்டது. நம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கொடுப்போம். நம் சகோதர, சகோதரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நம் பெற்றோர்களுக்கு தரமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவோம்” என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் உருக்கமாக பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X