என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலையில் 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
Byமாலை மலர்17 Jan 2020 5:04 AM GMT (Updated: 17 Jan 2020 5:04 AM GMT)
சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகிற 20-ந்தேதி இரவு வரை அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 15-ந்தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.
பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனை காட்டப்பட்டு மகரவிளக்கு பூஜை நடந்தது. அதேநேரம் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடந்தது. சபரி மலையில் குவிந் திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
மகரவிளக்கு பூஜைக்கு பிறகும் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. தலையில் இருமுடி கட்டு சுமந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் முழங்க குழு குழுவாக சென்று பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
வருகிற 20-ந்தேதி இரவு வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். மறுநாள் (21-ந்தேதி) காலை 6 மணிக்கு பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார். அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் பிரசாதமாக வாங்கிச் செல்லும் அரவணை, அப்பம் ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 15-ந்தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.
பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனை காட்டப்பட்டு மகரவிளக்கு பூஜை நடந்தது. அதேநேரம் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடந்தது. சபரி மலையில் குவிந் திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
மகரவிளக்கு பூஜைக்கு பிறகும் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. தலையில் இருமுடி கட்டு சுமந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் முழங்க குழு குழுவாக சென்று பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
வருகிற 20-ந்தேதி இரவு வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். மறுநாள் (21-ந்தேதி) காலை 6 மணிக்கு பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார். அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் பிரசாதமாக வாங்கிச் செல்லும் அரவணை, அப்பம் ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X