என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிழல் உலக தாதாவை இந்திரா காந்தி சந்தித்ததாக கூறியதற்கு எதிர்ப்பு - சிவசேனா எம்.பி. தனது கருத்தை திரும்ப பெற்றார்
Byமாலை மலர்16 Jan 2020 10:39 PM GMT (Updated: 16 Jan 2020 10:39 PM GMT)
இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
மும்பை:
புனேயில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு காலத்தில் மும்பையில் யார் போலீஸ் கமிஷனராக இருக்க வேண்டும், மந்திராலயாவில் யார் இருக்க வேண்டும் என நிழல் உலக தாதாக்கள் தான் முடிவு செய்தனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அப்போதைய நிழல் உலக தாதாக்களில் ஒருவரான கரீம் லாலாவை பைதானியில் சந்தித்தார். தாதா கரீம் லாலாவை இந்திராகாந்தி சந்தித்ததாக சஞ்சய் ராவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் நிலையில், இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்திரா காந்தி தொடர்பாக எனது கருத்து அவரது பெயருக்கோ அல்லது யாருடைய உணர்வுகளையோ புண்படுத்தியதாக கருதினால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்’ என்றார்.
புனேயில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு காலத்தில் மும்பையில் யார் போலீஸ் கமிஷனராக இருக்க வேண்டும், மந்திராலயாவில் யார் இருக்க வேண்டும் என நிழல் உலக தாதாக்கள் தான் முடிவு செய்தனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அப்போதைய நிழல் உலக தாதாக்களில் ஒருவரான கரீம் லாலாவை பைதானியில் சந்தித்தார். தாதா கரீம் லாலாவை இந்திராகாந்தி சந்தித்ததாக சஞ்சய் ராவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் நிலையில், இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்திரா காந்தி தொடர்பாக எனது கருத்து அவரது பெயருக்கோ அல்லது யாருடைய உணர்வுகளையோ புண்படுத்தியதாக கருதினால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X