search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை- கே.எஸ்.அழகிரி பேட்டி

    திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்றும், கூட்டணி பிரிய வாய்ப்பு இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்குமிடையே உரசல் போக்கு உருவானது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. 

    கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? என டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, டெல்லியில் இன்று சோனியா காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி நிலவரம் குறித்து எடுத்துக் கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை என்று தெரிவித்தார். திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள், இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×