என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் - பா.ஜனதா பிரமுகர் மிரட்டல்
Byமாலை மலர்14 Jan 2020 4:10 AM GMT (Updated: 14 Jan 2020 4:10 AM GMT)
பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன் என்று பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.
அலிகார்:
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
அவர் பேசியதாவது:-
தாவூத் இப்ராகிமிடம் பணம் வாங்கிக்கொண்டு, எங்கள் அதிகாரிகளுக்கு இடையூறு செய்பவர்கள் கடுமையாக அடி வாங்குவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜனதா விளக்கம் அளித்தது. ரகுராஜ் சிங், மந்திரியோ, எம்.எல்.ஏ.வோ அல்ல என்று பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்தார்.
ஆனால், உத்தரபிரதேச தொழிலாளர் துறையின் ஒரு பிரிவில் ஆலோசகராக ரகுராஜ் சிங் பொறுப்பு வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள் கோஷத்தை கண்டு கலங்குபவர்கள் அல்ல. அவர்கள் நாட்டை ஆள்பவர்கள். இதேபோன்று தான் ஆள்வார்கள்.
தாவூத் இப்ராகிமிடம் பணம் வாங்கிக்கொண்டு, எங்கள் அதிகாரிகளுக்கு இடையூறு செய்பவர்கள் கடுமையாக அடி வாங்குவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜனதா விளக்கம் அளித்தது. ரகுராஜ் சிங், மந்திரியோ, எம்.எல்.ஏ.வோ அல்ல என்று பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்தார்.
ஆனால், உத்தரபிரதேச தொழிலாளர் துறையின் ஒரு பிரிவில் ஆலோசகராக ரகுராஜ் சிங் பொறுப்பு வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X