என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 ஆண்டுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி 7 பேருக்கு விற்கப்பட்ட கொடுமை
Byமாலை மலர்11 Jan 2020 2:38 AM GMT (Updated: 11 Jan 2020 2:38 AM GMT)
10 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி 7 பேருக்கு விற்கப்பட்டு, 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் மீட்கப்பட்டு உள்ளார்.
சந்திராப்பூர் :
சந்திராப்பூர் பெங்காலி கேம்ப் பகுதியில் உள்ள கோவில் அருகே கடந்த 2010-ம் ஆண்டில் விளையாடி கொண்டு இருந்த 11 வயது சிறுமி திடீரென மாயமானாள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்கும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் அப்பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். இடைப்பட்ட 10 ஆண்டுகளில் கடத்தி விற்பனை, பாலியல் தொல்லை, கற்பழிப்பு என அந்த பெண் அனுபவித்த கொடுமைகளுக்கு கிடைத்த பரிசுதான் அந்த குழந்தைகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும்.
சம்பவத்தன்று விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, 2 பெண்கள் சேர்ந்து கடத்தி அரியானா மாநிலம் பானிபாத் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் விற்றுள்ளனர்.
இந்த சிறுமியை கொத்தடிமை போல அடைத்து வைத்த அந்த நபர் தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார். இதுமட்டும் இன்றி அவரின் குடும்பத்தை சேர்ந்த மேலும் சிலரும் சிறுமியை கற்பழித்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி 2 குழந்தைகளுக்கு தாயானார்.
இந்தநிலையில் பாதேபாத் பகுதியை சேர்ந்த தர்மவீர் என்பவரிடம் விற்கப்பட்டுள்ளார். அந்த நபர் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து உள்ளார். வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து 2 குழந்தைகளுடன் இருந்த பெண்ணை மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 11 வயதாக இருந்தது முதல் இதுவரை அந்த சிறுமி 7 பேருக்கு விற்கப்பட்ட கொடுமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
இந்த கடத்தல், கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சந்திராப்பூர் பெங்காலி கேம்ப் பகுதியில் உள்ள கோவில் அருகே கடந்த 2010-ம் ஆண்டில் விளையாடி கொண்டு இருந்த 11 வயது சிறுமி திடீரென மாயமானாள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்கும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் அப்பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். இடைப்பட்ட 10 ஆண்டுகளில் கடத்தி விற்பனை, பாலியல் தொல்லை, கற்பழிப்பு என அந்த பெண் அனுபவித்த கொடுமைகளுக்கு கிடைத்த பரிசுதான் அந்த குழந்தைகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும்.
சம்பவத்தன்று விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, 2 பெண்கள் சேர்ந்து கடத்தி அரியானா மாநிலம் பானிபாத் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் விற்றுள்ளனர்.
இந்த சிறுமியை கொத்தடிமை போல அடைத்து வைத்த அந்த நபர் தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார். இதுமட்டும் இன்றி அவரின் குடும்பத்தை சேர்ந்த மேலும் சிலரும் சிறுமியை கற்பழித்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி 2 குழந்தைகளுக்கு தாயானார்.
இந்தநிலையில் பாதேபாத் பகுதியை சேர்ந்த தர்மவீர் என்பவரிடம் விற்கப்பட்டுள்ளார். அந்த நபர் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து உள்ளார். வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து 2 குழந்தைகளுடன் இருந்த பெண்ணை மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 11 வயதாக இருந்தது முதல் இதுவரை அந்த சிறுமி 7 பேருக்கு விற்கப்பட்ட கொடுமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
இந்த கடத்தல், கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X