search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியினர்
    X
    போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியினர்

    பஞ்சாப் முதல்வர் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி போராட்டம்- தண்ணீரை பீய்ச்சியடித்து தடுத்த போலீஸ்

    மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் முதல்வரின் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முந்தைய அரசு தனியார் மின் உற்பத்தி நிலையங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்தும், பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

    இன்று சண்டிகரில் உள்ள முதல்வர் அமரீந்தர் சிங்கின் வீட்டின் அருகே ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பகவந்த் மான் எம்பி, ஹர்பால் சிங் சீமா எம்எல்ஏ, குல்தார் சிங் சந்த்வான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். 

    போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த காட்சி

    போலீசார் பேரிகார்டு அமைத்து தடுப்பு அமைத்து, போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுத்தனர். ஆனால், பேரிகார்டுகளை தாண்டி முதல்வரின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். 

    இதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×