என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் முதல்வர் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி போராட்டம்- தண்ணீரை பீய்ச்சியடித்து தடுத்த போலீஸ்
Byமாலை மலர்10 Jan 2020 10:29 AM GMT (Updated: 10 Jan 2020 11:54 AM GMT)
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் முதல்வரின் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முந்தைய அரசு தனியார் மின் உற்பத்தி நிலையங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்தும், பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று சண்டிகரில் உள்ள முதல்வர் அமரீந்தர் சிங்கின் வீட்டின் அருகே ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பகவந்த் மான் எம்பி, ஹர்பால் சிங் சீமா எம்எல்ஏ, குல்தார் சிங் சந்த்வான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
போலீசார் பேரிகார்டு அமைத்து தடுப்பு அமைத்து, போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுத்தனர். ஆனால், பேரிகார்டுகளை தாண்டி முதல்வரின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர்.
இதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X