search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கொடியவர்கள்: சித்தராமையா கடும் தாக்கு

    சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தனது வாழ்க்கையில் கடைசி நாட்களில் மிக கொடியவராக மாறினார். அதே போல் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நடந்து கொள்கிறார்கள் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
    பெங்களூரு :

    குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கருத்தரங்கம் பெங்களூரு காந்திபவனில் நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தனது வாழ்க்கையில் கடைசி நாட்களில் மிக கொடியவராக மாறினார். பிரதமர் மோடியும் அதே போல் நடந்து கொள்கிறார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கொடியவர்கள்.

    பிரதமர் மோடி, அமித்ஷா,

    டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய அரசுக்கு தொடர்பு உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதை பார்க்கும்போது, இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதே டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாட்டில் அச்சமான சூழலை உருவாக்கவே மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நான் பிறந்த தின சான்றிதழ் என்னிடம் இல்லை. எனது படிப்பு சான்றிதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட தேதி தான் எனக்கு தெரியும். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, எனது பெற்றோர் பிறந்த தேதி எப்படி எனக்கு தெரியும். ஆதிவாசிகள் எங்கிருந்து ஆவணங்களை வழங்குவார்கள்?.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.
    Next Story
    ×